ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு காந்தி அமைதி விருது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்-உலகம் முழுதும் அஹிம்சையின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை கவுரவிக்கும் வகையில், அவருக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.

latest tamil news

அமெரிக்காவில் செயல்படும் காந்தி அறக்கட்டளை அமைப்பு சார்பில், அஹிம்சைக்காக குரல் கொடுப்பவர்களுக்கும், மனித நேயத்துடன் சேவை செய்பவர்களுக்கும், ஆண்டுதோறும் காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது.

இந்தாண்டுக்கான விருது, தமிழகத்தைச் சேர்ந்தவரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு வழங்கப்பட்டது. வாஷிங்டனில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

latest tamil news

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்துக்கான இந்திய துாதரக அதிகாரி ஸ்வாதி குல்கர்னி, அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய, மறைந்த மார்டின் லுாதர் கிங்கின் உறவினர் ஐசக் பாரீஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

‘மகாத்மா காந்தியும், மார்டின் லுாதர் கிங்கும் வலியுறுத்திய அஹிம்சை கொள்கையை உலகம் முழுதும் பரப்பி வருவதற்காகவும், மனித குலத்துக்கு ஆற்றி வரும் சிறப்பான பங்களிப்புக்காகவும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு இந்த விருது வழங்கப்பட்டது’ என, காந்தி அறக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.