சிறுநீரக கல்லை அகற்றுவதாக கூறி சிறுநீரகத்தையே ஆட்டைய போட்ட மருத்துவர்கள்..!!

உத்தர பிரதே மாநிலம் கஸ்கஞ்சில் உள்ள தலைமை வளர்ச்சி அதிகாரி (சிடிஓ) அலுவலகத்தில் பணிபுரிந்த வந்தவர் சுரேஷ் சந்திரா. சமீபத்தில் அடிவயிற்றில் கடுமையான வலியால் அவதிப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. அல்ட்ராசவுண்ட் ரிப்போர்ட்டில் அவரது இடது சிறுநீரகம் காணவில்லை. பாதிக்கப்பட்டவரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிடிஓ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கஸ்கஞ்ச் சிடிஓ சச்சின் கூறுகையில், “இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தலைமை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை.

கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நாக்லா தால் கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் கூறுகையில், “ஏப்ரல் 14-ம் தேதி அறுவை சிகிச்சைக்கு முன் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இடது சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டது. கஸ்கஞ்சில் உள்ள ஒரு தனியார் நோயறிதல் மையத்தின் பில்லிங் கவுண்டரில் இருந்த நபர், ஏப்ரல் 14 அன்று நான் அனுமதிக்கப்பட்டிருந்த அலிகாரில் உள்ள குவார்சி பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு என்னை பரிந்துரைத்தார். அதே நாளில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் எனது சிறுநீரகக் கல் அகற்றப்பட்டு மருந்துகளின் பட்டியலைப் பரிந்துரைத்ததாகத் தெரிவித்தனர். ஏப்ரல் 17-ம் தேதி என்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.

அக்டோபர் 29 அன்று, எனக்கு அடிவயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. நான் கஸ்கஞ்சில் உள்ள ஒரு மருத்துவரை அணுகினேன், அவர் எனது முந்தைய மருத்துவ அறிக்கைகளைப் பார்த்து, என் வயிற்றின் இடது பக்கத்தில் நீண்ட கிடைமட்ட அறுவை சிகிச்சை குறி (தையல் குறி) பற்றி கேள்வி எழுப்பினார். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்த்தேன். இடது சிறுநீரகம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தனியார் மருத்துவமனைக்கு போன் செய்தேன். அங்கு கல்லை அகற்றுவதாக கூறி என் சிறுநீரகத்தை டாக்டர்கள் திருடிச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.