” பொன் மாணிக்கவேல் குற்றஞ்சாட்டி கொண்டே இருக்கட்டும், நாங்கள் பணிகளை செய்துகொண்டே இருப்போம்” – டி.ஜி.பி. ஜெயந்த் முரளி

அதிகாரிகள் மீது பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு வைத்து பேசிக்கொண்டே இருக்கட்டும், நாங்கள் பணிகளை செய்து கொண்டே இருப்போம் என, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தேசிய அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜெயந்த் முரளி பரிசுகளை வழங்கினார்.

பின்னர் பேட்டியளித்த அவர், இரண்டரை லட்சம் சிலைகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு, அறநிலையத்துறை தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

மேலும், மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 11 பாதுகாப்பு மையத்தில் பூஜைகள் செய்யப்பட்டு, பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயந்த் முரளி குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.