சுடுகாட்டில் பிறந்த நாள் கொண்டாடிய நபர்.. காரணம் என்ன தெரியுமா..?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் சுடுகாட்டில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரத்தன் (54). இவர், கடந்த 19-ம் தேதி தனது பிறந்த பிறந்த நாளை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் 40 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கேக் வெட்டிய கவுதம் ரத்தன், விருந்தினர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரித்தார். சுடுகாட்டில் பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது. கவுதம்கேக் வெட்டுவது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுதம், “சமூகத்தில் நிலவும் சூனியம் மற்றும் பேய் குறித்த மூட நம்பிக்கையை ஒழிப்பதற்காகவே சுடுகாட்டில் வைத்து எனது பிறந்த நாளை கொண்டாடினேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.