சென்னை தாம்பரம் அருகே கெளரிவாக்கத்தில் உள்ள புளூ ஸ்டோன் என்ற நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகைக் கடை சுவற்றில் இருந்த பைப் லைன் மூலம் கடையின் மேல்தளம் வரை சென்று, அங்கிருந்து மின் தூக்கியின் இணைப்பு அறை வழியாக உள்ளே சென்று பல லட்சம் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீஸார் கடையிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க அதிரடியாக களமிறங்கினர்.
நகைகளை கொள்ளையடித்த பிறகு அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் மேல் தளத்திலிருந்து சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை வெகு நேரம் கொள்ளையன் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு அருகே இருக்கும் கட்டத்தில் குதித்துத் தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, கொள்ளை அடித்தவர்களில் ஒருவன் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சிசிடிவி காட்சிகளைக் காண்டு போலீஸார் கொள்ளையனை அடையாளம் கண்டனர்.
உடனே அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவரும் அந்த கொள்ளையனும் ஒன்று தான் என்று தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், இதில் மூன்று பேர் ஈடுபட்டது தெரிந்தது.
பின்னர் இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து முதலில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டது.
அவர்கள் 3 மாதமாக வாடகை வீட்டில் தங்கி அந்த நகை கடை அருகே இருந்த கடை ஒன்றில் வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. கொள்ளையர்கள் லிப்ட் துவாரம் வழியாக கடைக்குள் சென்று கதவை உடைத்து திருடியுள்ளனர்.
3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கடையில் இருந்த நிலையில், லாக்கரில் இருந்த நகை தவிர்த்து மீதியிருந்த நகைகள் கொள்ளை போனது. திருடிய நகைகளை வீட்டில் வைத்து விட்டு கொள்ளையர்கள் வெளியில் வந்து சுற்றித் திரிந்துள்ளனர்.
இதனையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in