அரியானா மாநிலம் சூரஜ்குண்ட் வனப் பகுதியில் கடந்த வியாழன் பிற்பகல் மனித உடல் உறுப்புகளுடன் சூட்கேஸை ஃபரிதாபாத் போலீசார் மீட்டுள்ளனர். இறந்தவரின் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் உடல் மிகவும் பழையதாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசாரின் தகவல்களின்படி, மனித எச்சங்கள் ஒரு பிளாஸ்டிக் பை மற்றும் ஒரு சாக்கில் சுற்றப்பட்டிருந்தன, மேலும் சூட்கேஸுக்கு அருகில் ஆடைகள் மற்றும் பெல்ட் ஆகியவை மீட்கப்பட்டன.
போலீசாரின் முதல் பார்வையில், ஒரு நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியாத வகையில் உடலின் ஒரு பகுதி இங்கு வீசப்பட்டதாகத் தெரிகிறது என்று ஃபரிதாபாத் காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை ஃபரிதாபாத் போலீசார் டெல்லி போலீசாருடன் பகிர்ந்து கொண்டனர், அதன் அடிப்படையில் ஷ்ரதா வாக்கர் கொலை வழக்கை விசாரித்து வரும் தெற்கு டெல்லியின் மெஹ்ராலி போலீஸ் குழு, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் இணைந்தது. சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட சடலம் ஷ்ரதா வாக்கர் கொலை வழக்குடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று டெல்லி போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் சில மாதங்கள் பழமையானதாகத் தெரிகிறது, அவை ஆணா அல்லது பெண்ணுடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என்றும் அவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.