உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சிசாமாவ் என்ற இடத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் விவான் என்ற மாணவனுக்கு இந்த கொடூரமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. 2-ம் வாய்பாட்டை மாணவன் மனப்பாடமாக ஒப்பிக்காததால் ஆசிரியர் பவர் ஹேண்ட் டிரில்லிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி காயப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆசிரியர்கள் இந்த விஷயத்தை மூடிமறைக்க முயன்றனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் நேற்று பள்ளியின் முன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடிப்படைக் கல்வி அதிகாரி சுர்ஜித் குமார் சிங், சிறுவனின் பெற்றோரை சமாதானப்படுத்த முயன்றார். இதையடுத்து ஆசிரியர் அனுஜ் பாண்டேவை பணியில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்ததுள்ளார்.
மேலும், குழந்தைக்கு வேண்டுமென்றே அல்லது தற்செயலாக காயப்படுத்தப்பட்டதா மற்றும் சம்பவத்தை மூடிமறைப்பதில் மற்ற ஆசிரியர்களின் பங்கு போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
“அனுஜ் சார் என்னை இரண்டு டேபிள் சொல்லச் சொன்னார். நான் அட்டவணையை சரியாகப் படிக்கத் தவறியதால், அவர் கோபமடைந்து, எனது இடது கையில் துளையிடும் இயந்திரத்தை இயக்கினார். என் அருகில் நின்ற மாணவர்களில் ஒருவரான கிருஷ்ணா, இயந்திரத்தை நிறுத்துவதற்காக பிளக்கை வெளியே இழுத்தார், ஆனால் அதற்குள் என் கையில் காயம் ஏற்பட்டது,” என்று சிறுவன் சம்பவத்தை விவரித்தார்.