சீக்கியர்கள் கொலை!…43 காவலர்களுக்கு 7 ஆண்டு சிறை!

சீக்கியர்கள் கொலை வழக்கில் 43 காவலர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் என நினைத்து 10 சீக்கியர்களை காவலர்கள் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம், 47 போலீசாருக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதில் இடைப்பட்ட காலத்தில் 3 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், இந்த தண்டனைக்கு எதிராக அலகாபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணையின் முடிவில், 43 காவலருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடுங்குற்றத்தை செய்ததால் ஒருவரை கொல்வது காவலர்களின் கடமை அல்ல என்றும், தவறு செய்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.