4 கால்களுடன் பிறந்த குழந்தை – மருத்துவர்கள் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலத்தில் 4 கால்களுடன் பிறந்த குழந்தையால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது.

இதில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி என்னவென்றால் குழந்தை மொத்தம் 4 கால்களுடன் பிறந்துள்ளது. அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளது.

கருமுட்டை பிரிதலின்போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதாகவும், கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் டாக்டர்கள் கூறினர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.