தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார 11 கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் செல்வதை பார்த்து ஏக்கத்துடன் இருந்த நிலையில், முன்னாள் மாணவர்கள், ஊர் மக்கள் மற்றும் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுமம் இணைந்து பள்ளிக்கு 13 லட்ச ரூபாய் மதிப்பிலான பேருந்தை வாங்கி கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ம் கிராம மக்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் உரிய பேருந்து வசதிகள் இல்லாததால், மாணவர்கள் பல கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கு செல்லக்கூடிய நிலை உள்ளது.
இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு பயப்படக்கூடிய சூழல் உள்ளது. இதனை போக்குவதற்காகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் பயந்து வந்தனர். இதனால் தங்களின் கல்வி பாதித்தது.
தற்போது இந்த பள்ளி வாகன மூலம் நாங்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்வதாக மாணவிகள் கூறுகின்றனர். உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதால் எங்களுக்கு பாடம் படிக்க எளிதாக உள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிகின்றனர்.
newstm.in