நடிகை தற்கொலைக்கான காரணம் இதுதான்!!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த சீரியல் நடிகை துனிஷா ஷர்மா (20), மகாராஷ்டிரா மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேக்கப் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடிகையின் தற்கொலை குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஷஷென் முகமது கான் என்பவரை கைது செய்தனர். துனிஷா சர்மாவும், அவருடன் வெப் தொடரில் நடித்து வந்த நடிகர் முகமது கானும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

ஆனால், சமீபத்தில் இருவரது உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் துனிஷா சர்மாவும் – முகமது கானும் தங்கள் காதலை முறித்துக்கொண்டனர். காதல் முறிவால் துனிஷா சர்மா மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார்.

காதல் முறிவால் மன வருத்தத்தில் இருந்த துனிஷா படப்பிடிப்பு தளத்தில் நடிகர் முகமது கானின் மேக் அப் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து, நடிகை துனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் ஷஷென் முகமது கானை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.