சிவகங்கை : கார் கவிழ்ந்து விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன்-மனைவி

சிவகங்கை மாவட்டத்தில் கார் கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் கணவன்-மனைவி மற்றும் இரண்டு வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியை சேர்ந்தவர் உதய அரசன். இவருடைய மனைவி மேனஸ்கா. இவர்கள் இரண்டு பேரும் தங்களது இரண்டு வயது மகனுடன் காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திருப்பத்தூர் அருகே சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்பு சாலையை விட்டு விலகிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருப்பினும் இந்த விபத்தில் பயணம் செய்த கணவன்-மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மூன்று பேரையும் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.