சீன மக்கள் தொகையில் 80% பேருக்கு கொரோனா; உலகநாடுகள் பீதி.!

கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது, சுகாதாரத் துறைக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் அத்தியவசிய மருந்துகளின் தேவை அதிகரித்து வருவதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபமெடுத்து உள்ளது, இந்தியா உட்பட உலக நாடுகளை கதி கலங்கச் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

சீனா கொரோனா பரவல் குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, ‘‘சீனாவில் கொரோனா பரவலின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. எனினும், தொற்று நோய் நிலைமை குறித்து விளக்க சீனா இன்னும் முன்வர வேண்டும்.

சீனாவில் தற்போதைய தொற்று பரவல் பற்றிய விரிவான தகவல்கள் எங்களுக்கு தேவை. கண்காணிக்கவும், அதிக ஆபத்துள்ளவர்களுக்கு தடுப்பூசி போடவும் சீனாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம். மருத்துவ பராமரிப்பு மற்றும் அதன் சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கான எங்கள் ஆதரவை நாங்கள் சீனாவுக்கு தொடர்ந்து வழங்குகிறோம்’’ என அவர் கூறினார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய பரவலுக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் உருமாறிய பிஎப் 7 வகை தொற்று காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வகை தொற்றால், அடுத்த மூன்று மாதங்களில், சீனாவின் மக்கள் தொகையில், சுமார் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டத்திற்கு வரும் 23ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார்.

இந்தநிலையில் சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 80% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 80% மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சீனாவில் பெரிய கொரோனா அலை மீண்டும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் அப்துல் ரஹ்மான் மக்கி சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

மக்களின் போராட்டத்திற்கு பிறகு சமீபத்தில் தளர்த்தப்பட்ட கொரோனா நெறிமுறைகளால், நோய்ப்பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. காய்ச்சல் கிளினிக்குகள், தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் ஜனவரி 12ம் தேதியின் படி 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தாக அரசு துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.