தீவுகளுக்கு வீரர்களின் பெயர்களை சூட்ட உள்ள பிரதமர்!!

அந்தமான் – நிகோபார் தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை பிரதமர் மோடி நாளை சூட்டுகிறார்.

ஒவ்வொரு ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி மாவீரர்களின் நினைவாக பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக படை திரட்டி போராடிய மாவீரர் போஸ் நினைவாக பராக்ரம் திவாஸ் கொண்டாடப்படுகிறது.

இந்த வருட பராக்ரம் திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் கலந்து கொள்கிறார். நாளை சுதந்திரப் போராட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள்.

இந்த வருட பராக்ரம் திவாஸ் நிகழ்வின் போது, தீவில் கட்டப்படவுள்ள நேதாஜிக்கு அர்ப்பணிக்கப்படும் வகையிலான தேசிய நினைவகத்தின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

அந்தமான் – நிகோபார் தீவுகளின் வரலாற்று முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, 2018ஆம் ஆண்டு தீவுக்கு பிரதமர் பயணம் செய்த போது, ராஸ் தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் செயல்படுவார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உணர்வின் வெளிப்பாடாக, அந்தமான் – நிக்கோபார் பகுதியில் உள்ள 21 பெரிய பெயரிடப்படாத தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரின் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.