பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் நேவல் கிஷோர் பாண்டே (70). இவர், 40 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றியவர். அந்த நிலையில் சம்பவத்தன்று தனியார் பள்ளியில் சில குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு அவர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பாட்னாவில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள பபுவாவில் உள்ள பரபரப்பான பகுதியில் அவரது சைக்கிளில் இருந்து சறுக்கி விழுந்தார். இதனால் அவருக்கு பின்னால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உடனே, அங்கு வந்த இரண்டு கான்ஸ்டபிள்கள், சைக்கிளை அப்புறபடுத்த கூறினார்கள். இருப்பினும் அவர் அப்புற படுத்துவதற்குள் அந்த கான்ஸ்டபிள்கள் அவரை தாக்கத் தொடங்கினர். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவில், இரண்டு கான்ஸ்டபிள்கள் அவரைத் தாக்குவதைக் காட்டுகிறது, அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார். அவரது கைகளில் பல அடிகள் விழுந்தன. அவரை வெளியேற அனுமதிக்குமாறு அவர் அவர்களிடம் கெஞ்சுகிறார், ஆனால் இரண்டு பெண்களும் தொடர்ந்து அவரைத் தாக்குகிறார்கள்.
தனியார் பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக பாண்டே தினமும் இந்த பகுதியில் சைக்கிளில் செல்வதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன. இரண்டு கான்ஸ்டபிள்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பீகார் காவல்துறை ட்வீட் செய்துள்ளது.