ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை! விபரீத முடிவுக்கான காரணம்… புகைப்படங்கள்


இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து மீட்கப்பட்ட உடல்கள்

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் யவத் கிராம பகுதியில் உள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. 

சம்பவ இடத்துக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் விரைந்தனர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பொலிசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தொடர்ந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நேற்று மேலும் 3 சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டன.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் மோகன் உத்தம் பவார் (50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என்பது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை! விபரீத முடிவுக்கான காரணம்... புகைப்படங்கள் | Bodies Of Seven Members Same Family Found In River

விசாரணை

மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அந்த பெண்ணுடன் எங்கோ ஓடிவிட்டது தெரியவந்தது. இந்தநிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

மகன் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்து மோகன் உத்தம் பவார் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தார்களா? அல்லது யாராலும் மிரட்டப்பட்டதால் இந்த துயர முடிவை எடுத்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொலிசார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று தெரிகிறது, இருப்பினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை! விபரீத முடிவுக்கான காரணம்... புகைப்படங்கள் | Bodies Of Seven Members Same Family Found In River



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.