அண்ணன் – தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்மாமன்.. சொத்துப் பிரச்னை காரணமாக நடந்த விபரீதச் சம்பவம்!

ஈரோட்டில் சொத்து தகராறு காரணமாக அண்ணன் மற்றும் தம்பியை சொந்த தாய்மாமன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முனிசிபல் காலனியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன்களான கார்த்தி மற்றும் கௌதம் மற்றும் தாய்மாமா ஆறுமுகசாமி ஆகியோர் இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று  மீண்டும் இவர்கள்3 பேர் இடையேயும் தகராறு ஏற்பட்டதில் ஆறுமுகசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக் மற்றும் கௌதமை சரமாரியாக குத்தியதில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.