ரயில் முன்பு பாய்ந்த காதல் ஜோடி! காதலியை தொடர்ந்து காதலன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சென்னை பரங்கிமலை பகுதியில் காதல் ஜோடி ஒன்று தற்கொலைக்கு முயன்ற நிலையில், காதலி இறந்ததை தொடர்ந்து மருத்துவனையில் வைக்கப்பட்டிருந்த காதலனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 26ஆம் தேதி காதல் ஜோடி ஒன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதில், காதலி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காதலனும் பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை உள்ளகரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அஜித்குமார் சிங் என்பவரின் மகள் சிம்ரன். இவர் மடிப்பாக்கத்தில்  உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். உள்ளகரம் நாவலர் தெருவை சேர்ந்த இளங்கோ. இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இளங்கோவும், சிம்ரனும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு அவர்களது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
image
இந்நிலையில், இளங்கோவின் பிறந்தநாளை ஒன்றாக சேர்ந்து கொண்டாட, கடந்த ஜன.26ஆம் தேதி இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது தங்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று வேதனையடைந்த இருவரும், தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து பரங்கிமலை ரயில் நிலையம் அருகே சென்ற அவர்கள், இரவு 8.15 மணியளவில் மின்சார ரயில் ஒன்று சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை ரயில்நிலையம் வழியாக சென்றபோது, இளங்கோ மற்றும் சிம்ரன் இருவரும் ஒன்றாக சேர்ந்து ரயில் முன் பாய்ந்தனர். இதில் இளம்பெண் சிம்ரன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலன் இளங்கோ பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
image
தகவலறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார், படுகாயமடைந்த இளங்கோவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி இளங்கோ பரிதாபமாக உயிரிழந்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.