வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது!

திருச்செந்தூர் அருகே, வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.

நாலுமாவடி பாதகரை சுவாமி திருக்கோயிலை நிர்வாகம் செய்வதில் அழகேசன் மற்றும் ராஜேஷ் தரப்பினர் இடையே விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அழகேசன் தரப்பைச் சார்ந்த லோகநாதன் என்ற 72 வயது முதியவர் மீது  நாலுமாவடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் தாக்குதல் நடத்தியும், செருப்பு மாலை அணிவித்தும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.