பள்ளிகளுக்கிடையேயான கால்பந்து போட்டியில் தூய இருதய ஆண்டவர் பள்ளி அணி வெற்றி

நீலகிரி

விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில் நடந்தது. இதில் 8 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில் ஊட்டி தூய இருதய ஆண்டவர் மேல்நிலை பள்ளி அணியும், மகாத்மா மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. இதில் 2-0 என்ற கோல் கணக்கில் தூய இருதய ஆண்டவர் பள்ளி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி அணியினரை தூய இருதய ஆண்டவர் பள்ளி தலைமையாசிரியர் கேத்ரின் அமலோற்பவம் பாராட்டினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.