இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை ஏ குழு அறிவிப்பு

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட்போட்டிக்கான இலங்கை ஏ குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (16) வெளியிட்டுள்ள இரண்டாவது போட்டிக்கான குழுவில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாமிக்க கருணாரத்ன, பிரவீன் ஜயவிக்ரம மிலான் ரத்நாயக்க ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இளம் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவுடன், இசித விஜேசுந்தர மற்றும் அம்ஷி டி சில்வா ஆகியோர் இரண்டாவது போட்டிக்கான ஏ குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை முதல் போட்டியில் விளையாடியிருந்த அனுபவ வீரர் அஞ்சலோ மெதிவ்ஸ் தொடர்ந்தும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், சதீர சமரவிக்ரம அணியில் தலைவராக தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

தேசிய அணி வீரர்களான அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுசான் ஆகிய வீரர்களும் இரண்டாவது போட்டிக்கான குழாத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், இரண்டாவது போட்டி நாளை (18) நடைபெறவுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை ஏ குழு :

அவிஷ்க பெர்னாண்டோ, லசித் குரூஸ்புள்ளே, நுவனிது பெர்னாண்டோ, அஞ்சலோ மெதிவ்ஸ், சதீர சமரவிக்ரம (தலைவர்), சஹான் ஆராச்சிகே, துனித் வெல்லாலகே, இசித விஜேசுந்தர, பிரமோத் மதுசான், துஷான் ஹேமந்த, அம்ஷி டி சில்வா, கவிஷ்க அஞ்சுல, லஹிரு உதார, நிபுன் தனஞ்சய, சுமிந்த லக்ஷான்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.