கினிகத்தேனையில் 3 பஸ்கள் விபத்து

2 இ.போ.ச. பஸ்களுடன்; 1 தனியார் பஸ் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

 கினிகத்தேனை பெரகஹமுல பகுதியில் நேற்று (16)  பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்று பயணிகள் இறங்குவதற்காக பெரகஹமுல பகுதியில் நிறுத்தப்பட்டபோது, கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட போதே எதிர் திசையில் ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் மோதுண்டதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில், கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.