குட் நியூஸ்..!! உங்க வீட்டில் பெண் குழந்தை இருக்கா… ரூ.50000 உதவித் தொகை பெற அறிய வாய்ப்பு..!!

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பொருள்வளம் போல், மனித வளத்தை மேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் முக்கியமானது என்பதால் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக குறிப்பாக பெண்குழந்தைகளுக்கு என முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தினை சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருப்பின் அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து சேமிப்பு பத்திரங்களாக வழங்கப்படுகிறது. இச்சேமிப்பு பத்திரம், 18 வயது நிறைவடைந்த 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த அக்குழந்தைகளுக்கு மட்டுமே வட்டியுடன் கூடிய முதிர்வு தொகையுடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் கோரிக்கை வைத்துள்ளார்.

விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட சேமிப்பு பத்திரத்துடன், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச்சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டா ஆகியவற்றுடன் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும், 0431- 2413796 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.