வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்கள் குறித்து விழப்புடன் செயல்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் (கார்கள்) திருடப்படுகின்றமை தொடர்பாக அண்மையில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தில் 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் கார் ஒன்று திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் பெலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் பொலிஸார் கையடக்கத் தொலைபேசி தரவுகளை வைத்து விசாரணை நடத்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

காணாமற்போன குறித்த காரை, சந்தேகநபர் 14 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார், அவர் ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை திருடிய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.