எச்சரிக்கை! நாளை +2 தேர்வில் காப்பி அடித்தால் கடும் தண்டனை!!

நாளை +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் முறைகேட்டில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வுகள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. பள்ளி மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 3,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் காப்பி அடித்தால் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வறையில் துண்டு தாள்களை தன் வசம் வைத்திருந்தால் அந்த மாணவர் பருவத்தில் எழுதிய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படும் மற்றும் ஓராண்டு தடை விதிக்கப்படும்.

ஆள் மாறாட்ட நடவடிக்கை செய்தால் பொது தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். மேலும், பருவத்தில் எழுதிய தேர்வுகள் ரத்து செய்யப்படும். விடைத்தாள்களில் விடைகளைத் தவிர்த்து வேறு விஷயங்களை எழுதினால் குறிப்பிட்ட அந்த மாணவர் எழுதிய பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.

விடைத்தாள்களை தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பினால் மூன்றாண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என 15 வகையான முறைகேடுகளை குறிப்பிட்டு அதற்குரிய தண்டனை விவரங்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.