துபாயில் சொத்து சேர்க்கும் திமுக குடும்பம்; மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர்.!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் 75 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, அரவக்குறிச்சி அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘

தேர்தல் வாக்குறுதியின் போது, ஐந்து பவுன் நகை இருந்தால் அடமானம் வையுங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்கிறோம் என்று கூறிவிட்டு, அதை நம்பி நகை வங்கியில் அடமானம் வைத்த பொதுமக்கள் ஏமாந்து விட்டனர்.

வாரிசு அமைச்சர்

ஸ்டாலின் கரூர் கிருஷ்ணராயபுரம்வந்த பொழுது, மகளிர் ஒருவர் ஐந்து பவுன் நகை அடமானம் வைத்தோம், நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியில் எப்பொழுது தள்ளுபடி செய்வீர்கள் என்று கேட்டதற்கு, எந்த வங்கியில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுவிட்டு சென்றார். இந்த நிலையில் திமுகவைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஐந்து பவுன் நகை கடன் தள்ளுபடி செய்தனர்.

படிக்கின்ற மாணவர்கள் வங்கியில் வாங்கும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கூறிவிட்டு நிறைவேற்றவில்லை. கேஸ் மானியம் நூறு ரூபாய் இல்லை, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நாட்டை கொள்ளை அடித்து விட்டு துபாயில் சொத்து சேர்க்கும் திமுக குடும்ப கட்சி அகற்றப்பட வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் 11 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் அதிமுக ஆட்சியின் பத்தாண்டு காலத்தில், மின்சாரம் சீர் செய்யப்பட்டு எட்டாண்டு காலத்தில் மின்மிகை மாநிலமாகவும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கியது அம்மாவின் அரசுதான். அதேபோல மின் கட்டண உயர்வு இல்லை, 100 யூனிட் வரை மின்சார கட்டணம் இல்லை என பல்வேறு திட்டங்களை வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா.

தற்பொழுது மின் கட்டண உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது, ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படமால் இருக்கும் மின் துறை அமைச்சர், மேலும் மின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் தான் புரட்சித்தலைவி அம்மா. பத்தாண்டு காலத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கி தமிழக மக்களின் பாராட்டுக்களை பெற்றவர்’’ என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.