தெலங்கானா முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!

உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக ஹைதராபாத் ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சந்திரசேகர் ராவுக்கு இன்று காலை வயிற்றில் அசௌகரியம் ஏற்பட்டது.

மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு, சி.டி. மற்றும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. வயிற்றில் ஒரு சிறிய புண் கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை தற்போது இயல்பாக உள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை தொடங்கி நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.