5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு, நாசாவின் SpaceX capsule லில் பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்..!

5 மாத பயணத்தை முடித்துக்கொண்டு நாசாவின் SpaceX capsule லில் விண்வெளி வீரர்கள் 4 பேர் பூமிக்கு திரும்பினர்.

விண்வெளி வீரர்கள் நேற்று விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு பயணத்தை தொடங்கிய நிலையில், அவர்கள் பயணித்த டிராகன் காப்ஸ்யூல், இந்திய நேரப்படி இன்று காலை புளோரிடா கடற்கரையில் தரையிறங்கியது.

அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்கள், ரஷ்யா மற்றும் ஜப்பானை சேர்ந்த தலா ஒரு வீரர் என 4 பேரை கொண்ட இந்தக் குழுவினர் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 157 நாட்கள் விண்வெளியில் இருந்தனர்.

38 வயதான அன்னா கிகினா, 20 ஆண்டுகளில் அமெரிக்க விண்கலத்தில் பறந்த முதல் ரஷ்யர் என்ற பெருமையைப் பெற்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.