பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்: 6 பேர் கைது| Delhi Police arrests 6, registers over 100 FIRs over ‘objectionable posters’ against PM Modi across city

புதுடில்லி: தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 100 வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் அச்சக உரிமையாளர்கள் ஆவார்கள்.

ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து கிளம்பிய வேனை போலீசார் சோதனை செய்ததில், ஆட்சேபனைக்குரிய போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த வேனை பறிமுதல் செய்த போலீசார், டில்லியின் பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போஸ்டர்களை அகற்றியுள்ளனர்.

கண்டனம்

போஸ்டர் விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டதற்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடிக்கு ஜனநாயகம் குறித்து தெரியவில்லை. போஸ்டரை பார்த்து பயப்படுவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.