டெல்லியில் இளம்பெண் நிக்கி யாதவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாஹில் உள்பட 6 பேருக்கு காவல் நீட்டிப்பு!

டெல்லியில் இளம் பெண் நிக்கி யாதவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாஹில் மற்றும் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் காவல் முடிவடைந்ததையடுத்து அந்த ஆறு பேரும் நேற்று டெல்லி துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நிக்கியுடன் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்த சாஹில் கடந்த மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.

நிக்கி கொலைக்குப் பின் வேறு ஒரு பெண்ணை அவர் மணம் முடித்துள்ளார். இதையடுத்து, கொலையை மறைத்ததற்காக சாஹிலின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.