நாளை முதல் ரம்ஜான் நோன்பு – தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு!

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் வானில் பிறை பார்த்து ரமலான் நோன்பு துவங்கும்.

இந்நிலையில் தான் தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் சார்பில் ரமலான் நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து,தமிழ்நாடு அரசு தலைமை காஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,” ஹிஜ்ரி 1444 ஷாபான் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 22-03-2023 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.

ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 24-03-2023 தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் ஷபே கத்ர் 18-04-2023 செவ்வாய்க்கிழமை மற்றும் 19-04-2023 புதன்கிழமை ஆகிய இரு நாட்களின் மத்தியிலுள்ள இரவில் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.