Vinayakan: நானும், மனைவியும் பிரிஞ்சுட்டோம்: ஜெயிலர் பட நடிகர் அறிவிப்பு

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Vinayakan announces separation from wife Babita: ஜெயிலர் படத்தில் நடித்து வரும் விநாயகனும், அவரின் மனைவி பபிதாவும் பிரிந்துவிட்டார்கள். இது குறித்து விநாயகன் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

​விநாயகன்​Ajith : திடீரென்று மனம் மாறிய அஜித்: ஏ.கே. 62 பட மொத்த பிளானும் மாறுதாம்பிரபல மலையாள நடிகரான விநாயகன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் மலையாள நடிகர் விநாயகன். இந்த நொடியில் இருந்து எனக்கும், மனைவிக்குமான அனைத்து தொடர்பும் முடிவுக்கு வந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

​விளாசல்​விநாயகனின் மனைவி பபிதா வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார். தான் பபிதாவை பிரிந்ததற்கான காரணத்தை விநாயகன் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அவரின் வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, பபிதாவுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. இனியாவது அவர் சந்தோஷமாக வாழட்டும். இது போன்ற ஒரு கணவர் தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.

​ரசிகர்கள்​விநாயகனின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியாமல் சும்மா அவரையே குறை சொல்ல வேண்டாம் என அவரின் ரசகர்கள் கூறி வருகிறார்கள். கடந்த 1995ம் ஆண்டு வெளியான மோகன்லாலின் Manthrikam படம் மூலம் நடிகரானவர் விநாயகன். கடந்த 2016ம் ஆண்டு வெளியான கம்மாட்டிபாடம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதை பெற்றார் விநாயகன்.
​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விநாயகன். அவரின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது என நெல்சன் இதுவரை தெரிவிக்கவில்லை. நன்றாக நடிக்கத் தெரிந்தவர் என பெயர் எடுத்த விநாயகனுக்கு ஜெயிலர் படத்தில் சிறு கதாபாத்திரமாகத் தான் இருக்கும் என பேசப்படுகிறது. Aishwarya Rajinikanth: ஏமாத்திட்டீங்க ஐஸ்வர்யா: லால் சலாம் ஹீரோ விஷ்ணு விஷால்​

​சர்ச்சை​அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார் விநாயகன். அதனால் தான் அவரை ஜெயிலர் படத்தில் ஒப்பந்தம் செய்தபோது தலைவருடன் இந்த நடிகர் நடிக்க வேண்டாம் நெல்சன் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். ஏதாவது பேசி வம்பில் மாட்டுகிறார். அதன் பிறகு மன்னிப்பு கேட்கிறார். இவரால் ஜெயிலர் படத்தின் பெயர் கெட்டுப் போகும் என ரசிகர்கள் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

​Karthi: அடடே, நம்ம சிறுத்தை கார்த்தியின் மகளா இது, என்னம்மா வளர்ந்துட்டாப்ல!​
​மீ டூ(Me Too)​ஒருத்தி பட விளம்பர நிகழ்ச்சியில் பெண் பத்திரிகையாளரிடம் விநாயகன் பேசியவிதம் பிரச்சனையானது. அந்த நிகழ்ச்சியில் விநாயகன் கூறியதாவது, மீ டூ இயக்கம் என்றால் என்னவென்று தெரியாது. பெண்களிடம் செக்ஸ் வைக்க கேட்பது தான் மீ டூ என்றால் அதை நான் தொடர்ந்து செய்வேன் என்றார். பின்னர் தன் பேச்சுக்காக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டு மன்னிப்பு கேட்டார் விநாயகன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.