மகனை கத்தியால் வெட்டிவிட்டு.. தந்தை செய்த காரியம்.! தர்மபுரியில் சோகம்..!

தர்மபுரி மாவட்டத்தில் மகனை கத்தியால் வெட்டிவிட்டு தந்தையை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் போலரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் (65). இவருக்கும், இவரது மகன் ஓட்டுநரான சின்னசாமி(40) என்பவருக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கோவிந்தன், சின்னசாமியை கத்தியால் வெட்டியுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்த சின்னசாமியை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கோவிந்தன், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.