கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லிக்கு எச்சரிக்கை

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களை முகக்கவசம் அணியுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.

மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் தற்போதைய மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாகவும் டெல்லி அரசு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறுமாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் நாடு முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.