Chandrasekhar On Vijaykanth Health:விஜயகாந்த்துக்கு வேறு ஏதோ நடந்திருக்கிறது..நடிகர் சந்திரசேகர்பரபரப்புபேட்டி

சென்னை: Chandrasekhar On Vijayakanth Health (விஜயகாந்த் உடல்நலம் பற்றி வாகை சந்திரசேகர்) விஜயகாந்த்திற்கு கெட்ட பழக்கத்தால் உடல்நிலை சரியில்லாமல் போகவில்லை. அவருக்கு வேறு ஏதோ நடந்திருக்கிறது என நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

மதுரையில் பிறந்த விஜயகாந்த்துக்கு சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசை வர சென்னைக்கு வந்துவிட்டார். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

விஜயராஜ் டூ விஜயகாந்த்

வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார் விஜயகாந்த். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஓடவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இதனையடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

டாப் ஹீரோவான விஜயகாந்த்

டாப் ஹீரோவான விஜயகாந்த்

தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலின் கொடி உயர பறந்துகொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக வளர்ந்தார்.அவருக்கென்று இளைஞர்கள் ரசிகர்களாக மாறினர். மேலும் பல இயக்குநர்களுக்கு முதல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பும் வழங்கினார். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் சினிமா கல்லூரியில் இருந்து வந்த ஆபாவாணன், அரவிந்த்ராஜ். இவர்கள் இயக்கத்தில் ஊமை விழிகள் படத்தில் நடித்து படம் பெரும் ஹிட்டாக ஒரு காரணமாக இருந்தார்.

பலரின் பசியை போக்கிய விஜயகாந்த்

பலரின் பசியை போக்கிய விஜயகாந்த்

விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு தான் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க தாங்கள் வளர்ந்துவிட்ட பிறகு தங்களது அலுவலகத்தில் எந்நேரமும் பலருக்கு சாப்பாடு கொடுத்து அவர்களின் பசியாற்றியவர்கள் இருவரும். இருவரில் இப்ராஹிம் ராவுத்தர் இறந்துவிட, விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் முழு ஓய்வில் இருக்கிறார்.

ஊமை விழிகளில் விஜயகாந்த் நடிக்க காரணம்

ஊமை விழிகளில் விஜயகாந்த் நடிக்க காரணம்

ஊமை விழிகள் படத்தில் விஜயகாந்த் நடித்தது அந்தப் படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. அப்போது அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எந்த நடிகரும் முன்வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில் நடிகர் வாகை சந்திரசேகர்தான் ஊமை விழிகளில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும்; அதற்காகத்தான் விஜயகாந்த்து நடித்தார் என்ற ஒரு பேச்சும் உண்டு.

சந்திரசேகரின் பேட்டி

சந்திரசேகரின் பேட்டி

விஜயகாந்த்தின் நண்பரும், நடிகருமான வாகை சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த் குறித்து பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர், “சிவாஜி, எம்ஜிஆர் போல் விஜயகாந்த்தும் காலத்துக்கும் வயதே ஆகாது என்றே நினைத்தேன். ஏனென்றால் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல. கடுமையாக உழைத்த உடம்பு அது. எனவே அப்படியேத்தான் இருப்பார் என நம்பினேன்.

பத்து வருடங்கள் ஆகிவிட்டன

பத்து வருடங்கள் ஆகிவிட்டன

அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு நேரில் சென்று நான் சந்திக்கவில்லை. அவரை பார்த்து 10 வருடங்கள் ஆகின்றன. அவரது உடல்நிலை கெட்டுப்போனதற்கு காரணம் கெட்டப்பழக்கம்தான் என்கிறார்கள். ஆனால் அவரைவிட கெட்டப்பழக்கம் அதிகம் உள்ள நடிகர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார். விஜயகாந்த்துக்கு வேறு என்னமோ நடந்துவிட்டது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.