நிலத்தகராறில் அண்ணனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பி கைது!

செங்கல்பட்டு அருகே, நிலத்தகராறில் அண்ணனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருக்கழுங்குன்றம் எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன்கள் வெங்கடேசன் மற்றும் சந்திரன் ஆகியோர் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வெங்கடேசன் தனது தம்பி சந்திரனை, பின்னால் உள்ள காலி இடத்தில் வீடு கட்டிக் கொண்டு மனைவியுடன் அங்கு செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.

இதற்கு சந்திரன் மறுப்பு தெரிவித்ததால், இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நள்ளிரவும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சந்திரன் மதுபோதையில், தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மார்பில் காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.