சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை!!

சென்னையில் பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

பேரவையில் வீட்டு வசதித்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், சென்னைப் பெருநகரப் பகுதியில் இடையூறு இல்லாத பயணத்தினை உறுதிசெய்ய பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவையை ஒன்றிணைப்பது குறித்து கூறினார்.

சம்பந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த செயலி உருவாக்கப்பட்டு பயணச்சீட்டு முறை 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்தியாவில் முதன்முறையாக செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெற்று, பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதியை ஒருங்கிணைந்த சென்னை பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது.

இந்நிலையில், பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் நடைமுறை விரைவில் கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.