ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்..!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்து உள்ள வி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி. கூலித்தொழிலாளியான இவரது மகன் தினேஷ்குமார் (14). அதேபகுதியைச் சேர்ந்த சிறுவன் இன்பராஜ் (8) ஆகிய இருவரும் நண்பர்கள். இந்த நிலையில், இருவரும் குமாரமங்கலத்தில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிக்க சென்றனர்.

பள்ளி மாணவர்கள் இருவரும் நண்பர்கள் மீன் பிடித்துக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஏரியில் சென்று குளித்துவிட்டு வரலாம் என ஏரிக்குள்ளே இறக்கி சென்றுள்ளனர்.

ஆனால், ஆழம் தெரியாமல் இருவரும் ஏரிக்குள் சென்றபோது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தனர். மேலும் நீச்சல் தெரியாததால் இருவரும் கூக்குரல் இட்டு அலறினர். சிறுவர்களின் கூக்குரலை கேட்டு ஏரியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, ஏரியின் அருகில் இருந்தவர்கள் சிறுவர்கள் இருவரையும் ஏரிக்குள் இறங்கி காப்பாற்ற முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாத சிறுவர்கள் இன்பராஜ், தினேஷ்குமார் இருவரும் ஏரியிலே மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கம்மாபுரம் போலீசார், பள்ளி மாணவர்கள் 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஏரியில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.