காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி: கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பழிவாங்கிய இளைஞர்


ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது இளைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞரின் வெறிச்செயல்

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியை சேர்ந்த அனுதீப் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவியிடம் தனது காதலை வெளிபடுத்துவதற்காக, தனியாக பேச வேண்டும் என்று அந்த பெண்ணை அழைத்து சென்ற இளைஞர், அவரது வீட்டின் அறை ஒன்றில் கல்லூரி மாணவியை அடைத்து வைத்து காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி: கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பழிவாங்கிய இளைஞர் | Andhra Youngster Pours Hot Oil On College Girl 

ஆனால் அதை கல்லூரி மாணவி ஏற்க மறுத்துள்ளார். உடனே ஆத்திரமடைந்த அந்த இளைஞர் மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தாக்கியுள்ளார்.


தேடுதல் வேட்டையில் பொலிஸார்

எப்படியோ அந்த இளைஞரின் பிடியில் இருந்து தப்பித்த மாணவி, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்த பொலிஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி: கொதிக்கும் எண்ணெயை ஊற்றி பழிவாங்கிய இளைஞர் | Andhra Youngster Pours Hot Oil On College GirlFacebook

அத்துடன் கல்லூரி மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.