நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் சர்ச்சை பேச்சு!!

நடிகை ராஷ்மிகாவின் வள்ளி கதாபாத்திரம் குறித்து நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் பேசியிருப்பது சரச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடிகை ராஷ்மிகா ‘ஸ்ரீவள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது.

இந்த நிலையில், இந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால், ரஷ்மிகாவை விட நன்றாக நடித்திருப்பேன் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் தனக்கு நல்ல தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக தெரிவித்தார்.

விஜய் தேவரகொண்டாவுடன் தான் நடித்த ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ எனும் தெலுங்கு திரைப்படம் நினைத்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தனக்கு கிடைத்திருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன் என்றார்.

மேலும் அந்த கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மிகவும் அருமையாக நடித்திருப்பார். இருப்பினும் தனக்கு கிடைத்திருந்தால் ரஷ்மிகாவைவிட மிகவும் அருமையாக நடித்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.