பேருந்தில் சுயஇன்பம்… போலீசில் பிடித்துக் கொடுத்த மலையாள நடிகை!!

ஓடும் பேருந்தில் நடிகையின் அருகில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்திதா திருச்சூரிலிருந்து கொச்சிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, அருகில் இருந்த சவாத் ஷா என்ற இளைஞருடன் பேச்சு கொடுத்தார். இருவரும் பேசி கொண்டே வந்த நிலையில், திடீரென அந்த இளைஞர் நந்திதா மேல் கை வைத்ததாக சொல்லப்படுகிறது.

மற்றோரு கையால் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்த நந்திதா, உடனே தனது மொபைல் போனில் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். மேலும் அவரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து நடத்துநரிடம் நந்திதா நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றார். பேருந்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து நந்திதாவும், அந்த இளைஞர் மேல் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகை நந்திதா, இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.