ஓடும் காரை வழிமறைத்து ரூ.1.5 கோடி கொள்ளை.. 2 பேர் கைது

நெல்லையில் ஓடும் காரை வழிமறைத்து ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில்  2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை டவுனைச் சேர்ந்த நகை வியாபாரி சுஷாந்த் என்பவர் கேரளாவில் உதவியாளருடன் காரில் சென்றபோது மூன்றடைப்பு அருகே மர்ம கும்பல் ஒன்று அவரை தாக்கி பணத்தை  கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின்   அலைபேசி சிக்னலை வைத்து காரில் சென்ற கொள்ளையர்களை தனிப்படை போலீசார் பின் தொடர்ந்தனர்.

இறுதியாக கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை வழியாகச் சென்ற  நபர்களை போலீசார் மடக்கினர். காரில் இருந்த கொள்ளையர்கள் திருச்சூர் அருகே சாலக்குடியைச் சேர்ந்த பெபின் சாஜூ ,எட்வின் தாமஸ் என்பதுதெரிய வந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.