மும்பை:’டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன் பயணியர் கார் விலையை, சராசரியாக 0.6 சதவீதம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு, வரும் 17ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜூலை 16க்குள் முன்பதிவு செய்ய உள்ள வாடிக்கையாளர்களுக்கும், ஜூலை 31க்குள் வினியோகமாக உள்ள டாடா கார்களுக்கும், இந்த விலை உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என, டாடா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement