ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாகத் திருநங்கைக்குப் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதல் முறையாகத் திருநங்கைக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா,இந்த பிறப்புச் சான்றிதழை வழங்கினார். இனி ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார். மேலும் திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். நூர் ஷெகாவத்தின் பாலினம் பிறப்பின் போது ‘ஆண்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நூர் ஷெகாவத் ஆங்கில […]