மத்திய அரசில் ஆள்சேர்ப்பு முறை முற்றிலும் வெளிப்படை ஆனதாக மாறிவிட்டது: பிரதமர் மோடி

புதுடெல்லி: இன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில் அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசில் ஆள்சேர்ப்பு செயல்முறை முற்றிலும் வெளிப்படையானதாக மாறிவிட்டதாகக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம், புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். புதுதில்லியில் ஒருங்கிணைந்த வளாகமான "கர்மயோகி பவன்" கட்டடத்தின் முதல் கட்ட கட்டுமானப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 1 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்குப் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.