ஐ.எஸ்.எல். கால்பந்து: ஜாம்ஷெட்பூர் – மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

ஜாம்ஷெட்பூர்,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் – மும்பை சிட்டி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ஜாவியர் சிவெரியோ ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை சிட்டி அணி சார்பில் லல்லியன்சுவாலா சாங்டே ஆட்டத்தின் 74-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் – மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.