ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி

சென்னை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. – ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. அணி சார்பில் சஜாத் ஹுசைன் ஆட்டத்தின் இறுதியில் 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னை அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஐதராபாத் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.