ஒரு காரைத் தேர்ந்தெடுக்கும்போது வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அந்த எஸ்யூவி கார் பாதுகாப்பு கொடுக்குமா? என்பது தான். அதனை எப்படி அறிவது என்றால், மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தயாரிக்கப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை அரசின் விதிமுறைகளுக்குட்பட்டே எஸ்யூவி கார்களை தயாரிக்க வேண்டும். அப்போது தான் அந்த கார் விற்பனைக்கே கொண்டு வர முடியும்.
அந்தவகையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களில், சமீப காலமாக ஏர்பேக்குகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. இருப்பினும், ஒரு கார் மிகவும் பாதுகாப்பானது என்பதை காற்றுப்பைகள் மட்டும் உறுதி செய்யாது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். காரின் ஒட்டுமொத்த பாதுகாப்பை தீர்மானிக்க இன்னும் பல அம்சங்கள் இணைந்துள்ளன. இப்போது இந்தியாவில் SUVகளின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆறு ஏர்பேக்குகள் கொண்ட கார்கள் அதிக கவனத்தை பெறுகின்றன. அந்தவகையில், இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் விற்பனைக்கு கிடைக்கும் ஐந்து SUVகளை பார்க்கலாம்.