உயர்தர பொறியியல் தொழில்நுட்ப செயற்முறைப் பரீட்சைகள் இன்று (19) முதல் ஆரம்பம்

2023(2024) கல்வி பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறும் தினங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க இன்று மார்ச் மாதம் 19 முதல் 29 ஆம் திகதி நாடு பூராகவும் தெரிவுசெய்யப்பட்ட 41 மத்திய நிலையங்களில் இச்செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

பரீட்சர்த்திகளின் அனுமதிப்பத்திரங்களில் பரீட்சைக்கான திகதி மற்றும் நிலையம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டது.

அவ்வாறே தமக்கு சம்பந்தப்பட்ட திகதி மற்றும் இடத்தில் எவ்வித காரணத்திற்காகவும் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் பரீட்சைகளை திணைக்களம் மேலும் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.