சென்னை: 3 பேர் பலியான சேக்மெட் கேளிக்கை மதுபான விடுதி கட்டட விபத்து – வழக்கு பதிவும் கைதும்!

சென்னை சேமியர்ஸ் சாலை, ஆர்.ஏ புரம் பகுதியில் ஷேக்மேட் என்ற கேளிக்கை மதுபான விடுதி இயங்கி வருகிறது. இங்கு வி.வி.ஐ.பி-க்கள் அதிகளவில் வருவதுண்டு. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்த மதுபான விடுதியில் சில ஆஃபர்களும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் வழக்கத்தை விட அதிகளவில் இங்கு நேற்று மாலை கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் மதுபான விடுதியின் முதல்தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. அதனால் அங்கிருந்தவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

ஆய்வு செய்யும் மாநகராட்சி கமிஷனர்

இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் காவல் துறை உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். மீட்பு பணியின்போது இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில் இறந்தவர்கள் மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (22), திருநங்கை லல்லி (24), சைக்ளோன் ராஜ் (48) ஆகியோர் எனத் தெரியவந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று பேர் சடலங்கலாக மீட்கப்பட்டனர். இவர்கள் அங்கு வேலை பணியாளர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதில் 2 பேர் மணிப்பூரை சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக இந்த விபத்து நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதனால் மெட்ரோ ரயில்வே பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் இந்தக் கட்டட விபத்துக்கு மெட்ரோ ரயில் பணி காரணம் இல்லை என்று மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால் இந்தக் கட்டட விபத்துக்கு யார் காரணம் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு குழுவினர்

இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் கூறுகையில், “இந்த விபத்து சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த விபத்துக்கு என்ன காரணம் என்று விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் விபத்து காரணமாக விடுதியின் உரிமையாளர் அசோக்குமார் மீது ஐபிசி 304 (A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். அவரிடம் விசாரணை நடத்த சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். அதனால் அவரைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பாரின் மேலாளர் சதீஷ் மற்றும் 10 ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விபத்துக் குறித்து விசாரித்து வருகிறோம். இதில் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அந்தக் கட்டத்துக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.